Recent Articles
Sunday 26 October 2014
Sunday 26 October 2014
- 0 Comments
கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன.
தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம்.
இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என இலக்கு வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஒரு குப்பைக் கிடங்காகப் போய்விடுகிறது. இதனை எப்படி 10 நிமிடத்தில் சரி செய்து சுத்தப்படுத்த முடியும். சில வழிகளை இங்கு காணலாம்.
டாகுமெண்ட் போல்டரில்
பைல் சிஸ்டம் உருவாக்குதல்: முன்பு மை டாகுமெண்ட்ஸ் என்றும், தற்போது டாகுமெண்ட்ஸ் என்றும், விண்டோஸ் போல்டரை உருவாக்கி, மாறா நிலையில், நாம் உருவாக்கும் பைல்கள் சேமிக்கப்படும் இடமாக அமைந்துவிடுகிறது.
நாட்கள் செல்லச் செல்ல, இந்த போல்டர், எந்தவித வரையறை இல்லாமல், மொத்தமாக பைல் சேமிக்கும் இடமாக மாறிவிடுகிறது. இதனைச் சரி செய்திட முதலில் பைல்களின் வகை அல்லது பொருளுக்கேற்ப,போல்டர்களை உருவாக்க வேண்டும்.
சொந்த பைல்கள், அலுவலகம் சம்பந்தப்பட்டது, குழந்தைகள் தொடர்புள்ளவை, கல்வி மற்றும் பொதுவான பொருளுடையவை என இவற்றைப் பிரித்து போல்டர்களை அமைக்கலாம்.
இவற்றை உருவாக்கிய பின்னர், பைல்களை அதன் தொடர்புடைய போல்டர்களில் வைக்கவும். இந்த போல்டர்களில் வைக்க முடியாதபடி, தகவல்கள் கொண்ட பைல்கள் இன்னும் இருக்குமாயின், அவற்றிற்கான புதிய போல்டர்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். இப்போது உங்கள் டாகுமெண்ட்ஸ் போல்டர் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டிருப்பதனை உணர்வீர்கள்.
டவுண்லோட்ஸ் போல்டரை காலி செய்தல்: நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்திடும் பைல்கள் Downloads என்ற போல்டரில் சேவ் செய்யப்படும். இவற்றை இணையத்தில் இருந்து பெறும் நிலையிலேயே, அதன் தன்மைக்கேற்ற போல்டரில் அமைக்கலாம்.
ஆனால், சிலர், டவுண்லோட்ஸ் போல்டரிலேயே இறக்கி சேவ் செய்துவிடுவார்கள். இது எப்போதும் தற்காலிக போல்டராகத்தான் இருக்க வேண்டும். டவுண்லோட்ஸ் போல்டரில் வெகு நாட்கள் பைல் தங்கக்கூடாது.
இந்த போல்டரில் உள்ள அனைத்து பைல்களையும், மேலே கூறியபடி தயாரிக்கப்பட்ட போல்டர்களில் ஒதுக்குவது, நமக்கு நம் பைல்கள் இருக்குமிடம் குறித்த தெளிவான பார்வையைக் கொடுக்கும்.
வன்மம், இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, புறம்போக்கு, நானும் ரௌடி தான் என பல படங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்கு பிறகு எந்த படங்களும் வெளிவராமல் சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
மற்ற படங்களின் ரிலீஸ் திகதியை தன்னால் நிர்ணயிக்கமுடியாது என்பதால், விஜய் சேதுபதி தயாரித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தை ரிலீஸ்செய்யப்போகிறாராம்.
நவம்பர் கடைசியில் இசை வெளியீடு, டிசம்பரில் படம் ரிலீஸ் என பிளான் செய்து அதற்கான வேலைகளிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது.
வயதான தளர்வான தோற்றத்தில் நடித்தாலும் ஆரஞ்சு மிட்டாய் கம்பீரமான திரைக்கதை என்று மார்தட்டுகின்றனர் படக்குழுவினர்.
ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தின் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி தான் இந்த திரைப்படத்தின் வசனகர்த்தாவும் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் நிறுவனங்களுக்கு அதன் பெயர் எவ்வாறு உருவானது என்பது சுவாரஸ்யமான விஷயம். சில கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெயர் எவ்விதம் உருவானது என்பதை பார்க்கலாம்.
ஆடி
இந்நிறுவனத்தின் நிறுவனர் ஆகஸ்ட் ஹார்ச். ஜெர்மனியில் ஹார்ச் என்பதன் லத்தீன் மொழியாக்கம்தான் ஆடி. இந்நிறுவனத்தை ஆரம்பித்த 5 ஆண்டுகளில் இதை விட்டு வெளியேறினார். இருப்பினும் ஹார்ச் என்ற நிறுவனம் தொடர்ந்து ஆடி என்ற பெயரில் சொகுசு கார்களை தயாரித்து வருகிறது.
கெடிலாக் இந்தப் பெயர் 18-ம் நூற்றாண்டில் பல நாடுகளைக் கண்டுபிடித்த அறிஞர் பிரான்ஸைச் சேர்ந்த ’அன்டோய்னி லாமெட் டி லா மோதே சியுர் டி கெடிலாக்’ என்பவரின் பெயரைக் கொண்டது. இவர்தான் டெட்ராய்ட், மிச்சிகன் நகர்களைக் கண்டுபிடித்தவர். கெடிலாக் என்பது பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள சிறிய நகரமாகும். கெடிலாக் ஆலை 1902-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் இதை 1909-ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியது. அன்றிலிருந்து ஜெனரல் மோட்டார்ஸின் பிராண்டாக கெடிலாக் திகழ்கிறது.
செவ்ரோலெட்
மிக நீளமான கார் என்றாலே அது செவ்ரோலெட்டைத்தான் குறிக்கும். இதன் நிறுவனர் லூயிஸ் செவ்ரோலெட் பெயரிலேயே இந்நிறுவனம் செயல்பட்டது. 1917-ல் இந்நிறுவனத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. அதிலிருந்து ஜிஎம் பிராண்டாக செவ்ரோலெட் சாலைகளில் வலம் வருகிறது.
ரோல்ஸ் ராய்ஸ்
பிரடெரிக் ஹென்றி ராய்ஸ் என்பவர் 1884-ம் ஆண்டு மின் மற்றும் பொறியியல் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டார். 1904-ம் ஆண்டு முதலாவது காரை இவர் வடிவமைத்தார். அதே ஆண்டு சார்லஸ் ஸ்டூவர்ட்ர் ரோல்ஸ் என்பவரைச் சந்தித்தார். தனக்கு மட்டுமே பிரத்யேகமாகக் கார்களைத் தயாரித்துத் தருமாறு ஒப்பந்தம் செய்துகொண்டார். அவ்விதம் தயாரித்து அளிக்கப்பட்ட கார்களுக்கு ரோல்ஸ்-ராய்ஸ் என பெயரிடப்பட்டது.
Friday 24 October 2014
Friday 24 October 2014
- 0 Comments
அரியானா மாநிலம் கோகானா டவுனில் பீடா கடைக்காரர் ஒருவருக்கு ரூ. 132.29 கோடி மின்கட்டண ரசீது வழங்கப்பட்டுள்ளது.
மின்சார தொகையை பார்த்ததும் தீபாவளி நாளில் பீடா கடைக்காரர் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “நான் மின்கட்டண ரசீதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
ரசீதில் எண்களில் மட்டும் தொகை தவறாக குறிப்பிடப்படவில்லை. எழுத்துவடிவிலும் தவறாகவே எழுதப்பட்டு இருந்தது. நான் வாடகைக்கும் கடை நடத்தும் ஒரு சிறு கடைக்காரர். நான் ஒரு பல்பு மற்றும் காற்றாடியை பயன்படுத்துகிறேன்.
எனக்கு எப்போதும் ரூ. 1000-த்திற்கு கீழே மின்சார கட்டணம் வரும். இந்த மின்சார கட்டண ரசீது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்றார்.
இதுதொடர்பாக இன்று மின்துறை அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட ரசீதை பெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரியானா மின்துறையில் இதுபோன்ற தவறு நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு இதுபோன்ற சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முராரி லால் என்பவருக்கு ரூ. 234 கோடிக்கு மின்கட்டண ரசீது வழங்கப்பட்டது.
Thursday 23 October 2014
Thursday 23 October 2014
- 0 Comments
செல்ஃபி நம் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி இருக்கிறது. எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் அதை செல்ஃபிக்கள் இல்லாமல் யாரும் இப்போது கொண்டாடுவதில்லை. சந்தோஷமாக இருந்தாலும் செல்ஃபி, சோகமாக இருந்தாலும் செல்ஃபி, குழப்பத்தில் இருந்தாலும் செல்ஃபி, சிரித்தாலும் செல்ஃபி, அழுதாலும் செல்ஃபி என செல் முழுக்க நம் செல்ஃபிக்களால் நிரம்பி வழிகிறது.
ஆனால், பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் செல்ஃபி பற்றிய ஆய்வு முடிவுகள் நம்முடைய செல்ஃபி பழக்கத்தைப் பரிசீலிக்கச் சொல்கிறது.
சமூக வலைதளங்களில் அதிகமாக செல்ஃபி பகிர்பவர்களுக்கு நெருங்கிய உறவுகளிடம் பிரச்சினை வருவதாக அந்த ஆய்வு சொல்கிறது. பேஸ்புக்கில் அதிகமான லைக்குகளை அள்ளும் செல்ஃபிக்களால் நிஜ வாழ்க்கை உறவுகள் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
“தொடர்ந்து செல்ஃபி பகிர்பவர்களைச் சுற்றி இருப்பவர்களால் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை” என்கிறார் பர்மிங்கம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டேவிட் ஹாஃப்டன்.
எந்தளவுக்கு அதிகமாக செல்ஃபிக்கள் பகிரப்படுகின்றனவோ, அந்தளவுக்குச் சுற்றி இருப்பவர்களின் ஆதரவை அது குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
“நாம் நம் நண்பர்களுக்காக ஃபேஸ்புக்கில் பகிரும் படங்கள் பல தரப்பினரைச் சென்றடைகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் உங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கும் பல்வேறு குரூப்பில் இருப்பவர்களுடன் அந்தப் படங்கள் பகிரப்படுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் ஹாஃப்டன்.
அதே மாதிரி, குடும்பத்தினருடன் இருக்கும் செல்ஃபிக்களைவிட நண்பர்களுடன் இருக்கும் செல்ஃபிக்கள் அதிகமாகப் பகிரப்படும்போது, அது தம்பதிகளின் உறவை அதிகளவில் பாதிக்கிறது.
“இளம்பெண்களின் செல்ஃபிக்களுக்கு ஃபேஸ்புக்கில் கிடைக்கும் வரவேற்பு, ஆண்களுக்கும், மற்ற வயதினருக்கும் கிடைப்பதில்லை” என்று அந்த ஆய்வு முடிவு சொல்கிறது.
சிசேரியன் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கு நார்மலாகப் பிறக்கும் குழந்தைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குமாம்.
பிற்காலத்தில் அக்குழந்தைகளை டையாபடிஸ், ஆஸ்த்துமா, லுக்கேமியா ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் அதிகமாம். ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு இது.
சிசேரியனில குழந்தை திடிரென்று பிறந்து விடுவதால் வெளி உலகம் உடனே பழக முடியாமல் வரும் ஸ்ட்ரெஸால் தான் white blood cells-ல் உள்ள DNA மாற்றத்தை சந்திக்கிறது. அதனால் நோய் எதிப்பு சக்திக் குறைகிறது.
இயற்கைக்கு எதிராக நடக்கும் எதிலேயும் பின்விளைவுகள் உண்டு.
இயற்கையாக பிறக்கும் குழந்தைகள் மெதுவாக ஒரு அழுத்தத்தை உணர்ந்து பின் வெளி உலகை அனுபவிக்க ஆரம்பிக்கும். எனவே ஸ்ட்ரெஸ் என்பது மிகவும் குறைவு.
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் அதிகம். நம் மருத்துவர்கள் பணம் பண்ணும் எண்ணத்தில் இல்லாமல் சமுக சிந்தனையுடன் பணியாற்றி, சிசேரியனுக்கு வலியுறுத்தும் பெண்களையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.
Wednesday 22 October 2014
Wednesday 22 October 2014
- 0 Comments
கொல்கத்தா சிறையில் கைதியாக இருக்கும் கதிரேசன் (விஜய்) அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையிலுள்ள தனது நண்பன் சதீஷை உதவியுடன் பாங்காக் தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார். சதீஷின் உதவியுடன் பாங்காக் செல்ல விமான நிலையம் வரும் கதிரேசன், அங்கு நாயகி சமந்தாவை பார்க்கிறார். பார்த்ததுமே அவள் மீது காதல் வயப்படுகிறார். அவரிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கி கொள்கிறார். அத்துடன் பாங்காக் செல்லும் முடிவையும் தள்ளி வைக்கிறார்.
சமந்தா கொடுத்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பார்க்கும் கதிரேசன் ஏமாற்றம் அடைகிறார். அந்த அழைப்பு வேறு யாருக்கோ செல்கிறது. அவரை தேடி கண்டுபிடிக்க நண்பனுடன் சேர்ந்து அலைகிறார் கதிரேசன். மறுமுனையில் சிறையில் இருந்து தப்பித்து சென்ற கதிரேசன் சென்னையில் தான் இருக்கிறார் என்று அறிந்த கொல்கத்தா போலீஸ் அவரை பிடிக்க சென்னை வருகிறது.
இந்நிலையில் ஒரு நாள் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் ஒருவரை சுடுகிறது. துப்பாக்கியால் தாக்கப்பட்ட அவரை அருகில் சென்று பார்க்கிறார் கதிரேசன். அவர் பார்ப்பதற்கு தன்னை போல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். உடனே மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறார். கொல்கத்தா போலீஸ் கதிரேசனை தேடி மருத்துவமனைக்கு வருகிறது. அடிபட்டவன் தன்னைப்போல் இருப்பதை பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய அடையாளங்களை அடிபட்டவன் மீது வைத்துவிட்டு தான் தான் அடிப்பட்டவன் என்று காண்பித்து விட்டு அங்கிருந்து கதிரேசன் தப்பித்து விடுகிறார்.
அப்போது மாவட்ட கலெக்டர் கதிரேசனை பார்த்து ஜீவானந்தம் என்று அழைக்கிறார். அப்போது தான் அடிபட்டவன் பெயர் ஜீவானந்தம் என்று தெரிகிறது. கலெக்டர் கதிரேசனை ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்குள்ள முதியோர்கள் கதிரேசனை ஜீவானந்தம் என்று நினைத்துக் கொண்டு அவரை வரவேற்கிறார்கள். அப்போது 25 லட்சம் மதிப்புள்ள டி.டி.யை கதிரேசனிடம் கொடுக்கிறார் கலெக்டர்.
அதை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று விடலாம் என்று யோசிக்கிறார் கதிரேசன். அப்போது முதியவர் ஒருவர் அந்த டி.டி.யை கிழித்தெரிகிறார். எதற்காக இப்படி செய்கிறார் என்று தெரியாமல் முழிக்கும் கதிரேசனிடம், மீண்டும் ஒரு வாரத்தில் இந்த தொகையை தருகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார் கலெக்டர். இந்தப் பணம் கையில் கிடைக்கும் வரை முதியோர் இல்லத்திலேயே தங்குகிறார் கதிரேசன்.
இந்நிலையில் பெரிய தொழில் நிறுவனம் நடத்தும் நீல் நிதின் முகேசின் ஆட்கள் முதியோர் இல்லத்தில் தங்கும் கதிரேசனை அழைத்துக் கொண்டு போய் மிரட்டுகிறார்கள். தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற வேண்டும் என்றும் அதற்காக ஒரு தொகை தருவதாகவும் கூறுகிறார்கள். இல்லையென்றால் முதியோர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இதெல்லாம் எதற்கு நடக்கிறது என்று புரியாத கதிரேசன், பணம் வருவதால் பெரியோர்களை எல்லாம் கொல்ல வேண்டாம், இதற்கெல்லாம் சம்மதிக்கிறேன் என்று கூறி 5 கோடி ரூபாயை முன்பணமாக வாங்கி செல்கிறார்.
பணத்தை வைத்து வெளிநாட்டு செல்ல முடிவெடுக்கும் கதிரேசனுக்கு முதியோர் இல்லத்தில் இருந்து போன் வருகிறது. ஜீவானந்தத்திற்கு ஒரு விருதும் பணமும் தருவதாக கூறுகிறார்கள். விருதும் பணமும் வருவதால் அதற்கும் ஆசைப்பட்டு அங்கு செல்கிறார். அங்கு ஜீவானந்தம் யார் என்பதைப் பற்றிய வீடியோ ஒன்றை காண்பிக்கிறார்கள். அந்த வீடியோவை பார்க்கும் கதிரேசன், திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்காக பாடுபட்டவர் என்றும், அங்குள்ள மக்கள் விவசாய பூமியை காப்பாற்ற தங்களது உயிரை விட்டார்கள் என்றும் தெரிந்துக் கொள்கிறார்.
ஜீவானந்தம் பற்றி செய்திகள் தெரிந்த பின் மனம் மாறும் கதிரேசன், பணத்தையெல்லாம் வெறுத்து, ஜீவானந்தமாக மக்களுக்காக போராடி நீல் நிதினிடம் இருந்து விவசாய நிலத்தை பெற்று விவசாய மக்களுக்கு கொடுத்தாரா? உண்மையான ஜீவானந்தம் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.
படத்தில் கதிரேசன் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் அனைவரையும் கவர்கிறார் விஜய். பிற்பாதியில் விவசாயிகளின் வலிகளையும், வேதனைகளையும் அறிந்து செண்டிமெண்ட் கலந்து விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் பொறுப்பான பட்டதாரியாகவும், தன் மண்ணை காப்பாற்ற வேண்டும் என்னும் விவசாயியாகவும் அழுத்தமாக மனதில் பதிகிறார். பாடல் காட்சிகளில் அழகாகவும், சிறந்த நடனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர் பாடிய செல்பிபுள்ள பாடலில் திறமையாக செய்திருக்கிறார்.
கதாநாயகனுக்கு அதிகம் உள்ள கதையில் சமந்தாவிற்கு வாய்ப்பு குறைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் பாடல் காட்சிகளில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். நண்பனாக வரும் சதீஷ், நகைச்சுவைக்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் நீல் நிதின் பார்ப்பதற்கு அழகாகவும், தொழில் அதிபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவும் பொருந்தியிருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் நம் கண்களுக்கு விருந்தாக அளித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கும், அவர்களை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கத்தியை வைத்து குத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். நாட்டிற்கு விவசாயம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான் என்பதையும் மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக படத்தை இயக்கிய முருகதாசை வெகுவாக பாராட்டலாம். படத்தில் சில லாஜிக் மீறல்களையும், குறைகூறுவதையும் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘கத்தி’ கூர்மை.
சமந்தா கொடுத்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பார்க்கும் கதிரேசன் ஏமாற்றம் அடைகிறார். அந்த அழைப்பு வேறு யாருக்கோ செல்கிறது. அவரை தேடி கண்டுபிடிக்க நண்பனுடன் சேர்ந்து அலைகிறார் கதிரேசன். மறுமுனையில் சிறையில் இருந்து தப்பித்து சென்ற கதிரேசன் சென்னையில் தான் இருக்கிறார் என்று அறிந்த கொல்கத்தா போலீஸ் அவரை பிடிக்க சென்னை வருகிறது.
அப்போது மாவட்ட கலெக்டர் கதிரேசனை பார்த்து ஜீவானந்தம் என்று அழைக்கிறார். அப்போது தான் அடிபட்டவன் பெயர் ஜீவானந்தம் என்று தெரிகிறது. கலெக்டர் கதிரேசனை ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்குள்ள முதியோர்கள் கதிரேசனை ஜீவானந்தம் என்று நினைத்துக் கொண்டு அவரை வரவேற்கிறார்கள். அப்போது 25 லட்சம் மதிப்புள்ள டி.டி.யை கதிரேசனிடம் கொடுக்கிறார் கலெக்டர்.
அதை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று விடலாம் என்று யோசிக்கிறார் கதிரேசன். அப்போது முதியவர் ஒருவர் அந்த டி.டி.யை கிழித்தெரிகிறார். எதற்காக இப்படி செய்கிறார் என்று தெரியாமல் முழிக்கும் கதிரேசனிடம், மீண்டும் ஒரு வாரத்தில் இந்த தொகையை தருகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார் கலெக்டர். இந்தப் பணம் கையில் கிடைக்கும் வரை முதியோர் இல்லத்திலேயே தங்குகிறார் கதிரேசன்.
இந்நிலையில் பெரிய தொழில் நிறுவனம் நடத்தும் நீல் நிதின் முகேசின் ஆட்கள் முதியோர் இல்லத்தில் தங்கும் கதிரேசனை அழைத்துக் கொண்டு போய் மிரட்டுகிறார்கள். தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற வேண்டும் என்றும் அதற்காக ஒரு தொகை தருவதாகவும் கூறுகிறார்கள். இல்லையென்றால் முதியோர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இதெல்லாம் எதற்கு நடக்கிறது என்று புரியாத கதிரேசன், பணம் வருவதால் பெரியோர்களை எல்லாம் கொல்ல வேண்டாம், இதற்கெல்லாம் சம்மதிக்கிறேன் என்று கூறி 5 கோடி ரூபாயை முன்பணமாக வாங்கி செல்கிறார்.
பணத்தை வைத்து வெளிநாட்டு செல்ல முடிவெடுக்கும் கதிரேசனுக்கு முதியோர் இல்லத்தில் இருந்து போன் வருகிறது. ஜீவானந்தத்திற்கு ஒரு விருதும் பணமும் தருவதாக கூறுகிறார்கள். விருதும் பணமும் வருவதால் அதற்கும் ஆசைப்பட்டு அங்கு செல்கிறார். அங்கு ஜீவானந்தம் யார் என்பதைப் பற்றிய வீடியோ ஒன்றை காண்பிக்கிறார்கள். அந்த வீடியோவை பார்க்கும் கதிரேசன், திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்காக பாடுபட்டவர் என்றும், அங்குள்ள மக்கள் விவசாய பூமியை காப்பாற்ற தங்களது உயிரை விட்டார்கள் என்றும் தெரிந்துக் கொள்கிறார்.
ஜீவானந்தம் பற்றி செய்திகள் தெரிந்த பின் மனம் மாறும் கதிரேசன், பணத்தையெல்லாம் வெறுத்து, ஜீவானந்தமாக மக்களுக்காக போராடி நீல் நிதினிடம் இருந்து விவசாய நிலத்தை பெற்று விவசாய மக்களுக்கு கொடுத்தாரா? உண்மையான ஜீவானந்தம் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.
படத்தில் கதிரேசன் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் அனைவரையும் கவர்கிறார் விஜய். பிற்பாதியில் விவசாயிகளின் வலிகளையும், வேதனைகளையும் அறிந்து செண்டிமெண்ட் கலந்து விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் பொறுப்பான பட்டதாரியாகவும், தன் மண்ணை காப்பாற்ற வேண்டும் என்னும் விவசாயியாகவும் அழுத்தமாக மனதில் பதிகிறார். பாடல் காட்சிகளில் அழகாகவும், சிறந்த நடனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர் பாடிய செல்பிபுள்ள பாடலில் திறமையாக செய்திருக்கிறார்.
கதாநாயகனுக்கு அதிகம் உள்ள கதையில் சமந்தாவிற்கு வாய்ப்பு குறைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் பாடல் காட்சிகளில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். நண்பனாக வரும் சதீஷ், நகைச்சுவைக்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் நீல் நிதின் பார்ப்பதற்கு அழகாகவும், தொழில் அதிபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவும் பொருந்தியிருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் நம் கண்களுக்கு விருந்தாக அளித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கும், அவர்களை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கத்தியை வைத்து குத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். நாட்டிற்கு விவசாயம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான் என்பதையும் மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக படத்தை இயக்கிய முருகதாசை வெகுவாக பாராட்டலாம். படத்தில் சில லாஜிக் மீறல்களையும், குறைகூறுவதையும் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘கத்தி’ கூர்மை.
அவிநாசி மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார் விஷால். இவருக்கு துணையாக பிளாக் பாண்டி, சூரி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு நாள் ஷாப்பிங் மாலில் நாயகி சுருதிஹாசனை விஷால் சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இரண்டு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் சுருதிஹாசன் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த விஷால், சுருதியிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு அவர் மீது விஷாலுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.
பிறகு அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நட்பாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் சுருதி மீது விஷாலுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை சுருதியிடம் நேரடியாக சொல்கிறார். ஆனால் சுருதியோ அவருடைய காதலை நிராகரித்து, அவமானப்படுத்தி விடுகிறார்.
இதற்கிடையில் கோவையில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான கோவை குருப்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களான ராதிகா, தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை பொள்ளாச்சி சேத்துமடை பெருமாள் கோவில் அறங்காவலராக இருக்கும் அன்னதாண்டவம் அபகரிக்க முயற்சி செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்திவரும் இவர், மறைமுகமாக பல கொலைகளை செய்து வருகிறார். இவரது அபகரிப்பு திட்டத்தை தெரிந்து கொண்ட கோவை குருப்ஸ் பங்குதாரர்கள், அந்த நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் சுருதியின் தோழி வீட்டுக்கு தெரியாமல் காதலுடன் ஊரை விட்டு ஓடுகிறாள். இதை அறியும் சுருதி விஷாலின் உதவியுடன் அவளது தோழியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார். தான் அவமானப்படுத்தினாலும் தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுத்த விஷாலின் மீது சுருதிக்கு காதல் வருகிறது. தன் காதலை விஷாலிடம் சொல்ல செல்கிறார்.
அப்போது நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க ரிஜிஸ்டர் அலுவலத்திற்கு சென்றிருக்கும் ராதிகாவுடன் விஷாலை பார்த்ததும் சுருதி, விஷால் யார் என்று சூரியிடம் கேட்கிறார். அதற்கு சூரி கோவை குரூப்ஸ் பங்குதாரர்களின் ஒருவரான ராதிகாவின் மகன் தான் விஷால் என்று கூறுகிறார். இதை கேட்டதும் விஷாலை அவமானப்படுத்தியதை எண்ணி வருந்துவதுடன், தன் காதலை சொல்லமலேயே சென்று விடுகிறார். இருந்தாலும் அவளது தோழி மூலமாக சுருதி காதலிப்பதை விஷால் தெரிந்துக் கொள்கிறார். இருவரும் காதலித்து வருகிறார்கள்.
ஒரு நாள் போலீஸ் உயர் அதிகாரியான சத்யராஜை, அன்னதாண்டவத்தின் ஆட்கள் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களை விஷால் அடித்து சத்யராஜையும் அவரது மனைவியையும் காப்பாற்றுகிறார். தன்னுடைய திட்டம் நிறைவேறாததால் கோபம் அடையும் அன்னதாண்டவம் யார் என்று தெரியாத விஷாலை தேடி கண்டுபிடித்து தீர்த்து கட்ட முயற்சி செய்கிறார். இந்நிலையில் அன்னதாண்டவத்திற்கு அறங்காவலர் பதவியும் பறிபோகிறது. அந்தப் பதவிக்கு ஜெயப்பிரகாஷ் வருகிறார். ஊர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜெயப்பிரகாசை ஊர் மக்கள் முன்னிலையில் வேறொருவர் மூலம் அவரை அடிக்கவைத்து அவமானப்படுத்துகிறார் அன்னதாண்டவம்.
ஜெயப்பிரகாசுக்கு நேர்ந்த அவமானம், தனக்கு ஏற்பட்டதாக எண்ணிய ராதிகா, தனது மகனான விஷாலை அழைத்து, அன்னதாண்டவத்தை அடிக்கும்படி ஆணையிடுகிறார். விஷாலும் தன் அம்மாவின் ஆணைக்கிணங்க அன்னதாண்டவத்தின் வீட்டிற்கு சென்று அவரை அடித்து துவம்சம் செய்கிறார். தன் சித்தப்பா ஜெயப்பிரகாசை அவமானப்படுத்தியது போல் பொதுமக்கள் முன்னால் அன்னதாண்டவத்தையும் அவமானப்படுத்துவேன் என்று விஷால் சவால் விட்டு செல்கிறார்.
சொன்னது போல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வைத்து பலரும் பார்க்கும் வகையில் அன்னதாண்டவத்தை அடித்து அவமானப்படுத்துகிறார். இதை சுருதி வீடியோ எடுத்து தோழிக்கு அனுப்புகிறார். தோழியோ அந்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோடு செய்து விடுகிறார். இது உலகம் முழுவதும் பரவி அன்னதாண்டவத்திற்கு பெரிய அவமானத்தை ஏற்படுகிறது. இந்தளவிற்கு அவமானப்படுத்திய விஷாலையும் அவனது குடும்பத்தையும் பழி வாங்க அன்னதாண்டவம் முடிவு செய்கிறார்.
இறுதியில் அன்னதாண்டவம் விஷால் குடும்பத்தை பழிவாங்கினாரா? இல்லை அன்னதாண்டவத்திடம் இருந்து தன் குடும்பத்தை விஷால் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் விஷால் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸ் ஹீரோவிற்கான அந்தஸ்தை அதிகப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். நாயகியான சுருதியை கோவை பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹரி படத்தில் வரும் கதாநாயகிகளுக்கு உண்டான கிராமத்து பெண் வேடம் சுருதிக்கு பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் நல்ல நடிப்பு, பாடல் காட்சிகளில் சிறப்பான ஆட்டம் என ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
சூரி, பிளாக் பாண்டி இவர்கள் செய்யும் காமெடி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக சூரியின் காமெடி அருமை. ராதிகா அழகான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். சத்யராஜ் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று மொட்டை தலையுடன் மிரட்டுகிறார். ஆக்ரோஷமான காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னதாண்டவம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
படத்திற்கு கூடுதல் பலம் யுவனின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சத்யராஜுக்கு பின்னணி இசை அருமை. ஆண்ட்ரியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். ஆனால் ஆட தான் முடியவில்லை.
ஹரி தனது படத்திற்குண்டான காதல், ஆக்ஷன், செண்டிமென்ட், காமெடி என அனைத்தையும் இப்படத்திலும் சரியாக கலந்து சுவையாக படைத்திருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மிரள வைக்கிறது. அதை காட்சியமைத்த விதமும் பின்னணி இசையும் சேர்ந்து விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பூஜை’ பூஜிக்கலாம்.
பிறகு அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரும் நட்பாக பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் சுருதி மீது விஷாலுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை சுருதியிடம் நேரடியாக சொல்கிறார். ஆனால் சுருதியோ அவருடைய காதலை நிராகரித்து, அவமானப்படுத்தி விடுகிறார்.
இதற்கிடையில் கோவையில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான கோவை குருப்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களான ராதிகா, தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தை பொள்ளாச்சி சேத்துமடை பெருமாள் கோவில் அறங்காவலராக இருக்கும் அன்னதாண்டவம் அபகரிக்க முயற்சி செய்கிறார். பைனான்ஸ் கம்பெனி நடத்திவரும் இவர், மறைமுகமாக பல கொலைகளை செய்து வருகிறார். இவரது அபகரிப்பு திட்டத்தை தெரிந்து கொண்ட கோவை குருப்ஸ் பங்குதாரர்கள், அந்த நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் சுருதியின் தோழி வீட்டுக்கு தெரியாமல் காதலுடன் ஊரை விட்டு ஓடுகிறாள். இதை அறியும் சுருதி விஷாலின் உதவியுடன் அவளது தோழியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார். தான் அவமானப்படுத்தினாலும் தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுத்த விஷாலின் மீது சுருதிக்கு காதல் வருகிறது. தன் காதலை விஷாலிடம் சொல்ல செல்கிறார்.
அப்போது நிலத்தை ஊர் கோவிலுக்கு எழுதி கொடுக்க ரிஜிஸ்டர் அலுவலத்திற்கு சென்றிருக்கும் ராதிகாவுடன் விஷாலை பார்த்ததும் சுருதி, விஷால் யார் என்று சூரியிடம் கேட்கிறார். அதற்கு சூரி கோவை குரூப்ஸ் பங்குதாரர்களின் ஒருவரான ராதிகாவின் மகன் தான் விஷால் என்று கூறுகிறார். இதை கேட்டதும் விஷாலை அவமானப்படுத்தியதை எண்ணி வருந்துவதுடன், தன் காதலை சொல்லமலேயே சென்று விடுகிறார். இருந்தாலும் அவளது தோழி மூலமாக சுருதி காதலிப்பதை விஷால் தெரிந்துக் கொள்கிறார். இருவரும் காதலித்து வருகிறார்கள்.
ஒரு நாள் போலீஸ் உயர் அதிகாரியான சத்யராஜை, அன்னதாண்டவத்தின் ஆட்கள் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களை விஷால் அடித்து சத்யராஜையும் அவரது மனைவியையும் காப்பாற்றுகிறார். தன்னுடைய திட்டம் நிறைவேறாததால் கோபம் அடையும் அன்னதாண்டவம் யார் என்று தெரியாத விஷாலை தேடி கண்டுபிடித்து தீர்த்து கட்ட முயற்சி செய்கிறார். இந்நிலையில் அன்னதாண்டவத்திற்கு அறங்காவலர் பதவியும் பறிபோகிறது. அந்தப் பதவிக்கு ஜெயப்பிரகாஷ் வருகிறார். ஊர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜெயப்பிரகாசை ஊர் மக்கள் முன்னிலையில் வேறொருவர் மூலம் அவரை அடிக்கவைத்து அவமானப்படுத்துகிறார் அன்னதாண்டவம்.
ஜெயப்பிரகாசுக்கு நேர்ந்த அவமானம், தனக்கு ஏற்பட்டதாக எண்ணிய ராதிகா, தனது மகனான விஷாலை அழைத்து, அன்னதாண்டவத்தை அடிக்கும்படி ஆணையிடுகிறார். விஷாலும் தன் அம்மாவின் ஆணைக்கிணங்க அன்னதாண்டவத்தின் வீட்டிற்கு சென்று அவரை அடித்து துவம்சம் செய்கிறார். தன் சித்தப்பா ஜெயப்பிரகாசை அவமானப்படுத்தியது போல் பொதுமக்கள் முன்னால் அன்னதாண்டவத்தையும் அவமானப்படுத்துவேன் என்று விஷால் சவால் விட்டு செல்கிறார்.
சொன்னது போல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வைத்து பலரும் பார்க்கும் வகையில் அன்னதாண்டவத்தை அடித்து அவமானப்படுத்துகிறார். இதை சுருதி வீடியோ எடுத்து தோழிக்கு அனுப்புகிறார். தோழியோ அந்த வீடியோவை யூ டியூப்பில் அப்லோடு செய்து விடுகிறார். இது உலகம் முழுவதும் பரவி அன்னதாண்டவத்திற்கு பெரிய அவமானத்தை ஏற்படுகிறது. இந்தளவிற்கு அவமானப்படுத்திய விஷாலையும் அவனது குடும்பத்தையும் பழி வாங்க அன்னதாண்டவம் முடிவு செய்கிறார்.
இறுதியில் அன்னதாண்டவம் விஷால் குடும்பத்தை பழிவாங்கினாரா? இல்லை அன்னதாண்டவத்திடம் இருந்து தன் குடும்பத்தை விஷால் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் விஷால் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸ் ஹீரோவிற்கான அந்தஸ்தை அதிகப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். நாயகியான சுருதியை கோவை பெண்ணாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹரி படத்தில் வரும் கதாநாயகிகளுக்கு உண்டான கிராமத்து பெண் வேடம் சுருதிக்கு பொருந்தாமல் இருக்கிறது. ஆனால் நல்ல நடிப்பு, பாடல் காட்சிகளில் சிறப்பான ஆட்டம் என ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
சூரி, பிளாக் பாண்டி இவர்கள் செய்யும் காமெடி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக சூரியின் காமெடி அருமை. ராதிகா அழகான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். சத்யராஜ் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று மொட்டை தலையுடன் மிரட்டுகிறார். ஆக்ரோஷமான காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னதாண்டவம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
படத்திற்கு கூடுதல் பலம் யுவனின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சத்யராஜுக்கு பின்னணி இசை அருமை. ஆண்ட்ரியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். ஆனால் ஆட தான் முடியவில்லை.
ஹரி தனது படத்திற்குண்டான காதல், ஆக்ஷன், செண்டிமென்ட், காமெடி என அனைத்தையும் இப்படத்திலும் சரியாக கலந்து சுவையாக படைத்திருக்கிறார். படத்தில் வரும் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மிரள வைக்கிறது. அதை காட்சியமைத்த விதமும் பின்னணி இசையும் சேர்ந்து விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பூஜை’ பூஜிக்கலாம்.
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலின் அனைத்துப் பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம்.
சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். நமக்கு ஒரு உடலின் பல உறுப்புக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு சிறுநீரகம்தான் முக்கியக் காரணமாகும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், தேவையில்லாத உப்புச் சத்துக்களையும் வடிகட்டும் ஒரு முக்கியமான பணியை சிறுநீரகம் செய்கிறது.
உடலில் உள்ள நீரின் அளவையும் அது கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இரத்த அழுத்தம், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் அமிலங்களின் அளவுகளையும் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் நம் உடலை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் நம் சிறுநீரகங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பரம்பரை பரம்பரையாக சிறுநீரக வியாதிகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியம். உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. அதாவது உங்கள் உணவுக் கட்டுப்பாடு, சிறுநீரகத்தை நன்றாகச் செயல்பட வைக்க உதவும். சுத்தமான மற்றும் ஃப்ரெஷ்ஷாக சமைக்கப்பட்ட உணவுகளையே உண்ணுங்கள்.
நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய சேர்த்துக் கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லது. சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கு இரத்த அழுத்தம் முக்கியம் என்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உயர் இரத்த அழுத்தம் நம் சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
அதேப்போல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களை சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ளும். புகைப்பிடிப்பவர்களையும் சிறுநீரக வியாதிகள் எளிதாகத் தொற்றிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.
பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து, போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள்.
நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.
குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க
வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:– மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fontsதேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும்.
அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் இtணூடூ+அ கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.
டாஸ்க் பார் / டூல் பார்
பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.
உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த...
கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது.
இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.
ஷிப்ட்+எப்5 என்ன நடக்கும்?
வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று.
அது கண்ட்ரோல் + இஸட். இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய் அழுத்தினால் போதும்.
நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.
குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க
வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:– மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fontsதேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும்.
அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் இtணூடூ+அ கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.
டாஸ்க் பார் / டூல் பார்
பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.
இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.
டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.
உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த...
கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது.
இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.
ஷிப்ட்+எப்5 என்ன நடக்கும்?
வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று.
அது கண்ட்ரோல் + இஸட். இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய் அழுத்தினால் போதும்.
மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள்:
வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.
மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.
மிளகில் உள்ள சத்துக்கள்:
தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு
வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்
சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
பற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .
பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா..?
கட்டாயம் படிக்க வேண்டியது அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!
எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது.
எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள்.
அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...
Subscribe to:
Posts (Atom)